புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-09-13 11:37 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, கொடும்பாளூர் பகுதியில் உள்ள ஒரு சில மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நட்டனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.  

மேலும் செய்திகள்