எரியாத மின் விளக்கு

Update: 2023-09-10 17:50 GMT

திருச்சி மாவட்டம், முசிறியில் இருந்து தும்பலம் வழியாக தா.பேட்டை செல்லும் சாலையில் நாடார் காலனி அமைந்துள்ளது. இங்குள்ள நான்கு ரோடு சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் வாகனங்களில் அந்த பகுதியை அச்சமின்றி கடந்து செல்ல முடிந்தது. ஆனால் தற்போது அந்த உயர்கோபுர மின்விளக்கு எரியாததால் எதிரே வரும் வாகனங்கள் மட்டுமில்லாமல் சாலையின் உள்ளே இருந்து வரும் வாகனங்களும் தெரியவில்லை. இதனால் அப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படும் முன் உயர் கோபுர மின் விளக்கை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்