பழுதடைந்த சுவிட்ச்

Update: 2023-09-10 11:39 GMT

கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட இனயம் இனியநகர் மற்றும் பாலத்தில் இருந்து கருங்கல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் சிலவற்றில் சுவிட்ச் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், தெருவிளக்கு எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பழுதடைந்த சுவிட்சை அகற்றி விட்டு புதிய சுவிட்ச் பொருத்தி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்