ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-09-10 11:36 GMT

கரூர் மாவட்டம், பாலவிடுதி ஊராட்சி அத்திக்குளத்துப்பட்டியில் உள்ள பாலவிடுதி-கடவூர் சாலையோரத்தில் ஒரு மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்மாற்றியின் அருகே அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தின் உயரத்தை அதிகரிக்க கம்பத்தின் மீது இரும்பு துண்டுகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த இரும்பு துண்டுகள் வலுவிழந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. எனவே பலத்த காற்று அடிக்கும்போது இந்த இரும்பு துண்டுகள் மின்கம்பிகளுடன் சாலையில் விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்