தெருவிளக்குகள் ஒளிருமா?

Update: 2023-09-10 11:15 GMT

நாகை விழுந்தமாவடி தம்பிரான் குடியிருப்பு பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் மின்விளக்குகள் உள்ளன. இவை கடந்த சில நாட்களாக சரிவர எரிவதில்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்விளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்