ஆபத்தான மின்மாற்றி

Update: 2023-09-03 12:11 GMT

கரூர் மாவட்டம், மின்னாம்பள்ளி பஞ்சமதேவி ஊராட்சி, சந்தனகாளிப்பாளையம் சுடுக்காட்டு தடுப்பு சுவர் அருகில் ஒரு மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது அதனை தாங்கி நிற்கும் மின் கம்பங்கள் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்