ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஒரத்தில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. போக்குவரத்து பிரதானமிக்க இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படும் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.