மரக்கிளையை அகற்ற வேண்டும்

Update: 2023-08-30 06:54 GMT

மரக்கிளையை அகற்ற வேண்டும்

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட தினசரி சந்தைக்கு செல்லும் சாலையோரத்தில் ஒரு அரசமரம் உள்ளது. அந்த பகுதியில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளை மரக்கிளை சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், பலத்த காற்று வீசும் நேரத்தில் மின்கசிவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் கம்பிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் மரக்கிளைகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமாரவேல், லெட்சுமிபுரம்.

மேலும் செய்திகள்