ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றி

Update: 2022-07-25 12:33 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தின் வடக்கே ஏரியின் ஓரமாக மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் சிதிலமடைந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இதன் அருகே 2 மின்கம்பங்கள் புதிதாக நடப்பட்டன. ஆனால் கம்பம் நடப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மின்மாற்றி புதிய மின் கம்பங்களில் பொருத்தப்படாமல் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்மற்றி முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்