எலும்பு கூடான மின்கம்பம்

Update: 2023-08-27 11:40 GMT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பிரிவு தெற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் சில சேதமடைந்துள்ளது. இந்த மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்