புகார்பெட்டி எதிரொலி:- வழிப்பாதை நடுவே இருந்த மின்கம்பம் அகற்றம்

Update: 2023-08-23 11:06 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் வடமழை மணக்காடு ஊராட்சி 9-வது வார்டு பகுதி வழிப்பாதை நடுவே மின்கம்பம் இருந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து மின்கம்பம் அகற்றப்பட்டு வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தனர்.



மேலும் செய்திகள்