மின்கம்பம் மாற்றப்பட்டது

Update: 2023-08-23 08:42 GMT

கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட தச்சக்கோட்டுக்குழி பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் ஆபத்தான நிலையில் காணப்பட்டது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நட்டனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்