விருதுநகர் மாவட்டம் ஆத்திபட்டி கிராமம் நாரணாபுரம் பகுதியில் வீதிகளில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் போதிய தெருவிளக்குகள் இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.