தெருவிளக்குகள் ஒளிருமா?

Update: 2023-08-20 10:08 GMT

கோவை மத்திய சிறைச்சாலை பகுதியில் இருந்து காந்திபுரம் செல்லும் சாலையில் உள்ள தெருவிளக்குகள் கடந்த சில நாட்களாக ஒளிருவது இல்லை. இதன் காரணமாக இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதை பயன்படுத்தி அங்கு வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள். எனவே அந்த பகுதியில் பழுதாகி கிடக்கும் தெருவிளக்குகளை சரி செய்து, மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்