பழுதடைந்த மின்விளக்கு

Update: 2023-08-16 07:28 GMT

சுங்காங்கடையில் பஸ்நிறுத்தம் உள்ளது. இந்த நிறுத்தம் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ளதால் எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். இந்த பஸ் நிறுத்தத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் நிறுத்தத்தில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். சாலையை கடப்பவர்களும் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பழுதடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், கன்னியாகுமரி.

மேலும் செய்திகள்