ஆபத்தான நிலையில் மின்மாற்றி

Update: 2023-08-09 10:38 GMT

நாகை மாவட்டம் இடையாத்தாங்குடி ஊராட்சி கிடாமங்கலம் மெயின் சாலையில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி முறையான பராமரிப்பின்றி ஆபத்தான நிலையில் உள்ளது. குறிப்பாக மின்மாற்றியை தாக்கிபிடித்துள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன்காரணமாக மின்மாற்றி எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்மாற்றியை சீரமைத்திட நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்