செங்கல்பட்டு, மதுராந்தகம் வட்டம் ஒரத்தி பஸ் நிலையத்தில் உள்ள உயர் மின்கம்ப மின்விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் பழுதடைந்துள்ளது. இதனால் ஓரத்தி பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் இருட்டாக இருப்பதால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும்.