தெருவிளக்கு எரியவில்லை

Update: 2023-08-02 09:09 GMT

ரீத்தாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட குப்பியந்தரையில் இருந்து நீர்வக்குழி செல்லும் சாலையில் தெற்கு பிடாகை ஊர் உள்ளது. இந்த ஊரில் மேல குளத்தின் அருகே சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுருதி, தெற்கு பிடாகை.

மேலும் செய்திகள்