தெருவிளக்குகள் வேண்டும்

Update: 2023-07-30 14:15 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பகதோப்பு சாலையில் உள்ள சக்திநகர், இந்திரா நகர் மற்றும் ஜெ.ஜெ. நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பாதையில் உள்ள சாலைகளில் போதுமான அளவு தெருவிளக்கு வசதி இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவில் இந்த பகுதியில் செல்ல பெண்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலைகளில் தேவையான அளவு தெரு விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்