எரியாத தெருவிளக்குகளால் அவதி

Update: 2023-07-30 12:05 GMT
திருச்சி மாவட்டம், சென்னக்கரை கிராமத்தில் வாத்தலையில் இருந்து சென்னகரை செல்லும் புள்ளம்பாடி வாய்க்காலின் கரையில் தெருவிளக்குகள் உள்ளன. இந்த தெருவிளக்குகள் கடந்த 3 மாதமாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பாம்பு உள்ளிட்ட விஷ சந்துகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்