மின்தடையால் அவதி

Update: 2023-07-26 17:45 GMT

அந்தியூர் அருகே உள்ள புதுமேட்டூர் கிராமத்தில் தினமும் காலையில் 6.30 மணி அளவில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதன்பின்னர் 10 மணிக்கு மின்சாரம் வருகிறது. இதனால் தினமும் வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் மின்சாரம் இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர். இவர்களின் நலன்கருதி தினமும் மின்தடை ஏற்படுவதை தடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்