சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-07-23 12:24 GMT

திருவாரூர் மாவட்டம் திருவாதிரைமங்கலம் ஊராட்சி சூரனூர் பகுதி பெரியார் சிலை அருகே மின்கம்பம் பழுதடைந்து உள்ளது. இதனால் மின்கம்பத்தின் அடிப்பகுதி, மேல்பகுதியில் உள்ள சிமெண்டுகாரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன்காரணமாக மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்