சிதிலமடைந்த மின் கம்பங்கள்

Update: 2023-07-23 12:00 GMT

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு 2 மின் கம்பங்கள் அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அதன் அடிப்பகுதி சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின் கம்பங்கள் முறிந்து சாலையில் விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்