பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் சமத்துவபுரம் காந்திநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்கு கடந்த 3 ஆண்டுகளாக எரியவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளதுடன், சாலையை கடக்கும்போது பலர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.