வீணாகும் மின்சாரம்

Update: 2023-07-16 07:29 GMT

வெள்ளிச்சந்தை அருகே உள்ள சேனாப்பள்ளி பகுதியில் சாலையோரத்தில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை மாலையில் எரிய வைக்கப்பட்டு காலையில் அணைக்க வேண்டும். ஆனால், இந்த பகுதியில் உள்ள தெருவிளக்குகள் காலையில் முறையாக அணைப்பதில்லை. இதனால், மின்சாரம் வீணாகி வருகிறது. எனவே, மின்சாரம் வீணாவதை தடுக்க தானாக இயங்கும் வகையில் எந்திரத்தை பொருத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன்,ராமநாதபுரம்.

மேலும் செய்திகள்