சேதமடைந்த மின்கம்பங்கள்

Update: 2023-07-12 14:38 GMT
அரியலூர் தேடியில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து அப்பகுதிக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்மாற்றிகளை தாங்கி நிற்கும் 2 மின்கம்பங்களிலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்