சிதிலமடைந்த மின்கம்பங்கள்

Update: 2023-07-12 11:35 GMT

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், போதாவூர் கிராமம், பொன்னம்பலம் தெருவில் அமைக்கப்பெற்றுள்ள 4 மின் கம்பங்கள் மிகவும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த மின்கம்பங்கள் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியும் பழுதாகியுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்