சேதமடைந்த நிலையில் மின்கம்பம்

Update: 2023-07-09 13:51 GMT

திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடி நகராட்சி அலுவலகம் எதிரே மின்கம்பம் ஒன்று சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் வலுவிழந்து காணப்படுகிறது. இதன்காரணமாக மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் நிலவுகிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்