எலும்பு கூடான மின்கம்பம்

Update: 2023-07-05 11:38 GMT

திருச்சி புத்தூர் சீனிவாச நகரில் உள்ள பாத்திமா காலனியில் சாலை ஓரத்தில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் கீழே விழுந்து எலும்பு கூடு போல் காட்சியளிக்கிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து சாலையில் விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்