புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-07-05 11:37 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, குறிச்சிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் அருகே உள்ள மின்கம்பமானது மிகவும் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இதனால் எந்த நேரத்திலும் விழும் அபாயம் உள்ளது. பள்ளிக்கு வரும் குழந்தைகள் இவ்வழியாகவும் சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி சேதமடைந்த மின்கம்பம் அருகே முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அவ்வழியாக செல்லும்போது அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே எந்த ஒரு அசம்பாவித விபத்துக்களும் ஏற்படுவதற்கு முன்பாக எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ள அந்த மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.  

மேலும் செய்திகள்