எலும்பு கூடான மின்கம்பம்

Update: 2023-07-02 11:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, குறிச்சிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் அருகே உள்ள மின்கம்பமானது மிகவும் சேதமடைந்து அதில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இதனால் எந்த நேரத்திலும் விழும் அபாயம் உள்ளது. பள்ளிக்கு வரும் குழந்தைகள் இவ்வழியாகவும் சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி சேதமடைந்த மின்கம்பம் அருகே முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அப்பகுதி மட்டுமின்றி சுற்றுவட்டாரங்களில் இருந்து சாமி கும்பிட வரும் பக்தர்கள் அவ்வழியாக செல்லும்போது அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே எந்த ஒரு அசம்பாவித விபத்துக்களும் ஏற்படுவதற்கு முன்பாக எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்