எரியாத உயர்கோபுர மின் விளக்கு

Update: 2023-06-28 15:50 GMT

டி.என்.பாளையம்-பங்களாப்புதூர் நால்ரோடு சந்திக்கும் இடத்தில் உயர் மின்கோபுர விளக்கு உள்ளது. இது கடந்த 3 மாதங்களாக எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. நடந்து செல்ல பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் அச்சப்படுகிறார்கள். உயர் மின்கோபுர விளக்கு எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்