புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, அரசர்குளம் தென்பாதி பாரதிதாசன் நகர் பகுதிகளில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனை பொதுமக்கள் தொட்டால் பெரும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.