புகார்பெட்டி செய்தி எதிரொலி

Update: 2023-06-25 16:52 GMT
சங்கராபுரம் தாலுகா சீர்பாதநல்லூர் ஊராட்சி அய்யனார் கோவில் அருகே வயல்வெளியில் உயரழுத்த மின்கம்பிகள் கைக்கு எட்டும் தூரத்தில் மிகவும் தாழ்வாக சென்றது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயமும் உருவானது. இதுகுறித்த செய்தி, படத்துடன் தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் மின்கம்பிகளை உயர்த்தி கட்டி நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்