தெருவிளக்கு வேண்டும்

Update: 2023-06-25 14:54 GMT

அந்தியூர் மூங்கில்பட்டியில் உள்ள பள்ளிக்கூடத்தில் இருந்து இந்திரா நகர் பஸ் நிறுத்தம் வரை தெரு விளக்கு இல்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மூங்கில்பட்டியில் இருந்து இரவு நேரத்தில் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். குறிப்பாக வேலை முடிந்து மூங்கில்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து இந்திரா நகர் பஸ் நிறுத்தம் செல்பவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே மூங்கில்பட்டி பகுதியில் தெருவிளக்கு பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்