தேவையின்றி பகலில் ஒளிரும் தெருவிளக்கு

Update: 2023-06-25 12:13 GMT

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பேரளம் பகுதி பேரளம்-காரைக்கால் சாலையில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை இரவு நேரங்களில் மட்டுமின்றி  பகலிலும் ஓயாது ஒளிர்ந்து வருகிறது. இதனை பார்த்தபடி செல்லும் வாகன ஓட்டிகள் தேவையின்றி மின்சாரம் வீணாகுவதாக வருத்தம் தெரிவித்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தேவையின்றி பகலில் தெருவிளக்குகள் எரிவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்