செங்கல்பட்டு மாவட்டம், மகாலட்சுமி நகரிலிருந்து ஐயப்பன் கோவில் வரை செல்லும் மேம்பாலத்தின் கீழ் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். அடிக்கடி கொள்ளை சம்பவங்களும் இதனால் நடக்கிறது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் புதிய மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.