மின்விளக்குகள் சரி செய்யப்படுமா?

Update: 2023-06-21 13:33 GMT
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம். விஜயபுரம் ஊராட்சிக்குட்பட்ட சின்னக்கடை வீதிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் இங்குள்ள உயர்மின் கோபுரத்தில் உள்ள மின்விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் கடைவீதிக்கு வரும் பெண்கள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர்மின் கோபுரத்தில் உள்ள மின்விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்