விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கல்குறிச்சி ஊராட்சியில் உள்ள மின்கம்பங்களில் இருந்து மின்சார வாரியத்தின் அனுமதி இல்லாமல் சிலர் மின்சாரம் எடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் மின்சாரம் குறைந்த மின்அழுத்தத்தில் வினியோகிக்கப்படுகிறது. மின்வினியோக குறைவால் இப்பகுதி பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். மேலும் தெருவிளக்குகள் இரவு நேரங்களில் எரியாமல் இப்பகுதி இருண்டு காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் திருட்டை தடுத்து சீரான மின்விநியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.