கால்வாய் நடுவில் மின்கம்பம்

Update: 2023-06-14 17:52 GMT

தாளவாடி ஊராட்சியில் உள்ள தொட்டகாஞ்சனூர் கிராமத்தில் 2022-2023-ம் ஆண்டு 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் செலவில் மெட்டல்வாடி செல்லும் சாலையில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் கால்வாய் நடுவில் இருந்த மின்கம்பத்தை அகற்றவில்லை. இதனால் மழைகாலங்களில் கழிவு நீரில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்