இருளால் விபத்து

Update: 2023-06-04 17:18 GMT

அந்தியூர் சத்தி ரோட்டில் உள்ள தீயணைப்பு நிலையம் முதல் அத்தாணி வரை இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த பகுதியாகவே உள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சென்று வருகிறார்கள். எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் அடிக்கடி மோதி விபத்துகளை சந்தித்து வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே அந்த பகுதியில் உயர்மின்கோபுர மின்விளக்கு பொருத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்