தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-06-04 13:34 GMT

திருச்சி செல்வநகர் 2-வது வீதியில் சாலை ஓரம் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களில் ஒரு சில இடங்களில் மின் கம்பி தாழ்வாக செல்கிறது. இதனால் இதன் அருகே உள்ள வீடுகளின் மாடிக்கு சென்றால் குழந்தைகளின் கைகளுக்கு மின் கம்பிகள் எட்டும் வகையில் உள்ளது. எனவே விளையாட்டுத்தனமாக குழந்தைகள் மின்கம்பியை பிடித்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்