தொடர் மின் வெட்டு

Update: 2023-06-04 11:43 GMT
திருச்சி மாவட்டம், கீழவாளடி பகுதியில் உள்ள மாஸ்கார்டன், மல்லிகைநகர், அகிலண்டஸ்வரிநகர், அம்பாள் நகர் போன்ற பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவதால் கூலி வேலை செய்து விட்டு வரும் மக்கள் இரவில் தூங்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்