தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-06-04 11:43 GMT

கரூர் மாவட்டம், கோம்புப்பாளையத்திலிருந்து திருக்காடுதுறை செல்லும் ராஜவாய்க்கால் ஓரத்தில் போடப்பட்டுள்ள மண் சாலை வழியாக மின்கம்பம் நடப்பட்டு அந்த வழியாக மின்கம்பிகள் செல்கிறது. தற்போது வெயில் காரணமாக அந்த வழியாக செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. ராஜவாய்க்கால் ஓரத்தில் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மீது மின்கம்பிகள் மோதும் நிலை உள்ளது. இந்த மின் கம்பிகள் வழியாக 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. மின்கம்பிகள் மோதினால் பெரும் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைத்து விபத்தினை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்