தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2023-06-04 11:43 GMT

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் அருகே வடுகபட்டி செல்லும் சாலையில் இரவு நேரத்தில் சாலை நெடுகிலும் இருள் சூழ்ந்து உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்களும், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் இரவில் அச்சத்துடுன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வேட்டமங்கலத்தில் இருந்து வடுகபட்டி செல்லும் சாலையில் உள்ள மின்கம்பங்களில் தெருவிளக்கு அமைத்து கொடுத்து பொதுமக்கள் அந்த சாலை வழியாக அச்சமின்றி செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்