எரியாத மின்விளக்கு

Update: 2023-06-04 07:34 GMT

கணபதிபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட அரசு மருத்துவமனை அருகில் இருந்து லெமூர் கடற்கரைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்ட புதிய மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இரவு வீடுகளுக்கு திரும்புவதற்காக புறப்படும்போது பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லிங்கம், கணபதிபுரம்.

மேலும் செய்திகள்