மின்விளக்கு தேவை

Update: 2023-05-31 08:04 GMT

ஆளுரில் இருந்து கட்டிமாங்கோடுக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை அருகாமையில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. ஆனால், இந்த சாலையோரத்தில் பல மின்கம்பங்கள் அமைக்கப்பட்டும் மின்விளக்குகள் பொருத்தப்படாமல் காணப்படுகிறது. இதனால், இரவு அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்தி எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஸ் கிருஷ்ணன், ஆளுர்.

மேலும் செய்திகள்