தெருவிளக்கு வேண்டும்

Update: 2023-05-28 10:50 GMT
புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி முகைதீன் ஆண்டவர் மலை பகுதி பழைய மேல்நிலைப்பள்ளி அருகிலும், மாயான எரிமேடை எதிர்புறம் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தெரு விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருட்டாக உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தெருவிளக்கு அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்