தெருமின்விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2023-05-24 16:55 GMT
சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் உள்ள மயானப்பகுதியில் தெரு மின்விளக்கு இல்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழந்து காணப்படுவதால், இறுதி சடங்கிற்கு செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் மயானத்திற்கு செல்ல முறையான சாலை வசதியும் இல்லை. எனவே மின்விளக்கு அமைப்பதோடு, மயானத்திற்கு செல்ல முறையான சாலை வசதி ஏற்படுத்தி தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்