ஆபத்தான மின்மாற்றி

Update: 2023-05-21 12:20 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சியாத்தமங்கை கல்லூளி திருவாசல் செல்லும் சாலையில் மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றி முறையான பராமரிப்பின்றி ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. குறிப்பாக மின்மாற்றியை தாங்கி உள்ள தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்மாற்றி எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடும் சூழல் நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்மாற்றியை அகற்றிவிட்டு புதிய மின்மாற்றி வைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்